சென்னை,
அதிமுகவில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் தவெகவில் இன்று இணைந்தனர். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-
ஒரு தலைவன் சரியான முடிவெடுக்காமல் போனால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம்தான் இன்றைய அதிமுக. திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்கிறார்கள். தொண்டர்களின் மனநிலையைப் பற்றி கவலைப்படவில்லை. உண்மையை எடுத்துச் சொல்பவர்களை துரோகிகள் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. நாங்கள் உருவாக்கிய பொதுச்செயலாளரின் தவறான முடிவுகளால் அதிமுக தள்ளாடுகிறது.


%2Fnakkheeran%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F14%2Fe-2026-08-14-10-31-10.jpg&w=3840&q=75)
%2Fnakkheeran%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F13%2F270-2026-08-13-21-22-22.jpg&w=3840&q=75)
%2Fnakkheeran%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F12%2Fcm-vijay-nainar-2026-08-12-07-33-02.jpg&w=3840&q=75)
